நாளை மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்
திருத்தணி:திருத்தணி அரக்கோணம் சாலையில், உள்ள மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் மின்நுகர்வோர் குறை தீர்க்கும் கூட்டம், நாளை காலை 11:00 மணிக்கு நடைபெறுகிறது. கூட்டத்தில் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் தங்களது குறைகளை தெரிவிக்கலாம். மேலும், விவசாயிகள் கோரிக்கைகள் குறித்தும் மனுவாக கொடுக்கலாம். எனவே திருத்தணி கோட்ட விவசாயிகள் மற்றும் மின்நுகர்வோர் கூட்டத்தில் பங்கேற்று பிரச்னைகளுக்கு தீர்வு காணலாம் என மின்வாரிய செயற்பொறியாளர் பாஸ்கரன் தெரிவித்துள்ளார்.