வரதாபுரத்தில் சேதமடைந்த சிமென்ட் சாலை
பாண்டூர்:பூண்டி ஒன்றியம், பட்டரைப்பெரும்புதுார் ஊராட்சி, வரதாபுரம் ராமர் கோவில் தெருவில் சிமென்ட் சாலையில் பள்ளம் ஏற்பட்டு உள்ளது. 10 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட இந்த சிமென்ட் சாலையில் கழிவுநீர் சாலையின் குறுக்கே செல்ல சாலையின் கீழ் உருளை அமைக்கப்பட்டு இருந்தது.தற்போது சிமென்ட் சாலை சேதமடைந்து, உருளை உடைந்து சாலையில் பள்ளம் ஏற்பட்டு உள்ளது. இந்த சாலையில் தற்போது கல் ஒன்று போடப்பட்டு அடைக்கப்பட்டு இருந்த நிலையில் அந்த கல்லும் உடைந்து விழுந்துள்ளது.எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பகுதியினர் வலியுறுத்தி உள்ளனர்.