மேலும் செய்திகள்
வரும் 17ல் அஞ்சல் குறைதீர் முகாம்
14-Dec-2024
திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்ட காவல் துறையில் துப்பறியும் படைப்பிரிவில், 'லக்கி' என்ற மோப்பநாய, 10 ஆண்டுகளாக பணியாற்றி வந்தது.இந்த மோப்ப நாய் இதுவரை 137 இடங்களில் வெடிகுண்டுகள் துப்பறியும் பணிக்கு சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வந்தது.கடந்த 2015ம் ஆண்டு ஆவடியில் நடைபெற்ற தமிழ்நாடு காவல்துறை மாநில அளவிலான திறனாய்வு போட்டியில், இரண்டாவது இடம் பிடித்து வெள்ளிப்பதக்கம் வென்று சிறப்பாக பணி செய்து வந்தது.இந்நிலையில், லக்கிக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால், கடந்த ஆண்டு 2023 அக்டோபர் மாதம் பணி ஓய்வு அளிக்கப்பட்டது.அதைத் தொடர்ந்து திருவள்ளூர் மாவட்ட துப்பறியும் மோப்பநாய் படைப்பிரிவில் பராமரிக்கப்பட்டு வந்த நிலையில் வயது மூப்பு காரணமாக நேற்று முன்தினம் லக்கி மோப்ப நாய் உயிரிழந்தது,திருவள்ளூர் கால்நடை மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, மாவட்ட எஸ்.பி., அலுவலக மைதானத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட லக்கி உடலுக்கு, எஸ்.பி., சீனிவாச பெருமாள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து போலீசாரும் அஞ்சலி செலுத்தினர்.பின், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மைதானத்தில் இறுதி மரியாதை செய்யப்பட்டு, லக்கி நாயின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
14-Dec-2024