உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / ரூ.4 கோடியில் வளர்ச்சி பணி திருமழிசையில் தீர்மானம்

ரூ.4 கோடியில் வளர்ச்சி பணி திருமழிசையில் தீர்மானம்

திருமழிசை:திருமழிசை பேரூராட்சி அலுவலகத்தில் நேற்று, பேரூராட்சி கவுன்சிலர்கள் சாதாரண கூட்டம், செயல் அலுவலர் வெங்கடேஷ் முன்னிலையில், பேரூராட்சி தி.மு.க., தலைவர் மகாதேவன் தலைமையில் நடந்தது.கூட்டத்தில், வரவு - செலவினங்கள் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பின், பேரூராட்சியில் 15 வார்டுகளில், 4.27 கோடியில் சிமென்ட் கல் சாலை, தார், சிமென்ட் சாலை உட்பட பல்வேறு வளர்ச்சிப் பணிகளுக்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.மேலும், சொத்து வரி பாக்கி 2.71 கோடி ரூபாயை வசூலிக்க, பாக்கி உள்ள வீடுகளுக்கு நோட்டீஸ் வழங்கும் பணி நடந்து வருவதாகவும் பேரூராட்சி செயல் அலுவலர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை