நாளை மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்
திருத்தணி: திருத்தணி மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில், நாளை மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம், நண்பகல் 11:00 - மதியம் 1:30 மணி வரை நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில், பழுதடைந்த மின்மீட்டர், மின்கம்பம், குறைந்த மின்னழுத்தம் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் குறித்து தெரிவிக்கலாம் எனவே, திருத்தணி மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள மின்நுகர்வோர்கள் கூட்டத்தில் பங்கேற்று, தங்கள் பிரச்னைகளை தெரிவித்து பயன்பெறலாம் என, திருத்தணி மின்வாரிய பொறுப்பு செயற்பொறியாளர் முருகபூபதி தெரிவித்தார்.