உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பெரியகுப்பத்தில் இன்று மின் நுகர்வோர் கூட்டம்

பெரியகுப்பத்தில் இன்று மின் நுகர்வோர் கூட்டம்

திருவள்ளூர்:திருவள்ளூரில் இன்று, மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது. திருவள்ளுர், பெரியகுப்பம் மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில், மின் நுகர்வோர் குறை தீர்க்கும் கூட்டம், இன்று காலை 11:00 மணி முதல் மதியம் 1:30 மணி வரை நடைபெற உள்ளது. திருவள்ளூர் மேற்பார்வை பொறியாளர் ஏ.சேகர் தலைமையில் நடைபெறவுள்ள இந்த கூட்டத்தில், திருவள்ளூர் கோட்டத்திற்கு உட்பட்ட மின்நுகர்வோர் மற்றும் பொதுமக்கள், நேரில் வந்து மனு அளித்து, தங்கள் குறைகளை தெரிவிக்கலாம் என, திருவள்ளூர் மின்வாரிய செயற்பொறியாளர் கனகராஜன் கேட்டுக் கொண்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ