உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / காயலான் கடை ஆவடியில் தீக்கிரை

காயலான் கடை ஆவடியில் தீக்கிரை

ஆவடி:ஆவடி காமராஜர் நகர், 4வது தெருவைச் சேர்ந்தவர் சுரேஷ், 25. இவர், அதே பகுதியில் 10 ஆண்டுகளாக பிரம்ம சக்தி வேஸ்ட் மார்ட் என்ற பெயரில், காயலான் கடை நடத்தி வருகிறார்.நேற்று அதிகாலை இவரது கடை தீப்பிடித்து எரிவதாக, தகவல் வந்துள்ளது. இதுகுறித்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு வந்த ஆவடி மற்றும் அம்பத்துார் தீயணைப்பு வீரர்கள், அரை மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.இந்த தீ விபத்தில், கடையில் வைத்திருந்த பழைய பிளாஸ்டிக் பொருட்கள், அட்டை உள்ளிட்டவை தீக்கிரையாகின. ஆவடி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை