உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பொது - அழுகிய நிலையில் மூதாட்டி உடல் மீட்பு

பொது - அழுகிய நிலையில் மூதாட்டி உடல் மீட்பு

ஆவடி:திருநின்றவூர், அன்னை இந்திரா நகரைச் சேர்ந்தவர் சேகர், 55; தனியார் நிறுவன ஊழியர். அவரது தாய், சொக்கம்மாள், 91. கடந்த 8ம் தேதி, வீட்டை விட்டு வெளியே சென்ற மூதாட்டி, பின் வீடு திரும்பவில்லை.இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, வீட்டில் இருந்து அரை கி.மீ., துாரத்தில், அதிகம் போக்குவரத்து இல்லாத சாலையோரம், அழுகிய நிலையில், மூதாட்டி சொக்கம்மாள் உடல் மீட்கப்பட்டது. திருநின்றவூர் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை