உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / குட்கா கடத்தியவர் கைது

குட்கா கடத்தியவர் கைது

திருத்தணி:ஆந்திர மாநிலம், நகரி பகுதியில் இருந்து, தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள், திருத்தணி வழியாக கடத்துவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.இதையடுத்து, திருத்தணி போலீசார், நேற்று, பொன்பாடி சோதனைச்சாவடியில் வாகன சோதனை நடத்தினர். அப்போது, திருப்பதியில் இருந்து, திருத்தணி நோக்கி வந்த தனியார் பேருந்தில், 8 கிலோ, 700 கிராம் குட்கா பொருட்கள் கடத்தி வந்தது தெரிந்தது.இதையடுத்து, சென்னை கொருக்குபேட்டை பகுதியைச் சேர்ந்த காசிராஜன், 38, என்பவரை, போலீசார் கைது செய்து, குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி