மேலும் செய்திகள்
விளம்பர தட்டியால் விபத்து அபாயம்
19-Mar-2025
திருமழிசை:நெடுஞ்சாலையில் விளம்பர பதாகை மற்றும் கொடிக்கம்பங்கள் வைக்க சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. ஆனால், விளம்பர பதாகைகள் வைப்பது, தற்போதும் தொடர்கதையாக நடந்து வருகிறது.தற்போது, திருமழிசை - ஊத்துக்கோட்டை மற்றும் தண்டலம் - அரக்கோணம் நெடுஞ்சாலை மீடியன் மற்றும் சாலையோர மின்கம்பங்களில் எவ்வித அனுமதியும் பெறாமல், விளம்பர தட்டிகள் வைப்பது அதிகரித்து வருகிறது.இவ்வாறு வைக்கப்படும் விளம்பர தட்டிகளால், வாகனங்களில் செல்வோர் கவனம் சிதறி விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.மேலும், மின்கம்பங்களில் விளம்பர தட்டிகள் வைப்பதால், மின்வாரிய ஊழியர்கள் மின்கம்பங்களில் பணி மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.எனவே, திருமழிசை - ஊத்துக்கோட்டை மற்றும் தண்டலம் - அரக்கோணம் நெடுஞ்சாலை மீடியன், சாலையோர மின்கம்பங்களில் வைக்கப்படும் விளம்பர தட்டிகள் குறித்து ஆய்வு செய்து, நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
19-Mar-2025