மேலும் செய்திகள்
மது விற்ற பெண் கைது 30 பாட்டில்கள் பறிமுதல்
24-Sep-2024
கும்மிடிப்பூண்டி : கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூர் பஜார் பகுதியில் டூ-- வீலரில் மது விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. கும்மிடிப்பூண்டி கலால் போலீசார் நேற்று அப்பகுதியில் சோதனை மேற்கொண்டனர். அப்போது டூ- -வீலரில் மது விற்பனை செய்த தஞ்சாவூர் மாவட்டம், பூதலுார் பகுதியை சேர்ந்த தினேஷ்குமார், 32, என்பவரை கைது செய்தனர். டூ- -வீலருடன், விற்பனைக்கு வைத்திருந்த, 30 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். கும்மிடிப்பூண்டி கலால் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
24-Sep-2024