மேலும் செய்திகள்
வரும் 25ல் நெடுந்துார ஓட்ட போட்டி
16-Oct-2025
திருவள்ளூர்: திருவள்ளூரில் நேற்று, ஆண், பெண் இருபாலருக்கும் நெடுந்துார ஓட்டப் போட்டி நடந்தது. திருவள்ளூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நேற்று, முன்னாள் முதல்வர் அண்ணாதுரை பிறந்த நாளை முன்னிட்டு நெடுந்துார ஓட்டம் நடந்தது. கலெக்டர் பிரதாப் தலைமையில், அமைச்சர் நாசர் போட்டியை துவக்கி வைத்தார். போட்டியில், 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். முதல் மூன்று இடங்களில் வெற்றி பெற்ற வீரர் - வீராங்கனையருக்கு, 5,000, 3,000, 2,000 ரூபாய் வழங்கப்பட்டது. மேலும், 4 - 10 வரை இடம்பிடித்தோருக்கு, 1,000 ரூபாய் வழங்கப்பட்டது.
16-Oct-2025