பொன்னேரியில் உங்களை தேடி திட்டம்
திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்டத்தில் 'உங்களை தேடி உங்கள் ஊரில்' திட்டத்தில் பொன்னேரி வட்டம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது.திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:திருவள்ளூர் மாவட்டத்தில் மக்களின் குறைகளை கேட்டு உடனுக்குடன் தீர்வு காணும் வகையில், 'உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டம்' செயல்பட்டு வருகிறது. இதன்படி கலெக்டர் தலைமையிலான அனைத்து துறை அலுவலர்களும், மாதம் ஒரு வட்டத்தில் தங்கி, மக்களின் குறைகளை கேட்டு வருகின்றனர்.இந்த திட்டத்தின்படி பொன்னேரியில் வரும் 23ம் தேதி அனைத்து துறை அலுவலர்களும் முகாமிட்டு பொதுமக்களின் குறைகளை கேட்டு நிவர்த்தி செய்ய உள்ளனர்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.