உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / கால்வாயில் தவறி விழுந்தவர் பலி

கால்வாயில் தவறி விழுந்தவர் பலி

திருத்தணி:திருத்தணி பாரதியார் தெருவை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன், 62. சலவை தொழிலாளி. இவர் கடந்த 16ம் தேதி திருத்தணி என்.எஸ்.சி. சாலையில் உள்ள ரயில்வே கால்வாய் மீது அமர்ந்திருந்தார். மதுபோதையில் இருந்த அவர் தவறி கால்வாயில் விழுந்தார். அவ்வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு திருத்தணி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதலுதவிக்கு பின் மேல்சிகிச்சைக்கு சென்னை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று ராமகிருஷ்ணன் இறந்தார். திருத்தணி போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை