உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / மொபைல்போன் பேசியபடி தவறி விழுந்தவர் உயிரிழப்பு

மொபைல்போன் பேசியபடி தவறி விழுந்தவர் உயிரிழப்பு

கும்மிடிப்பூண்டி: பீஹார் மாநிலத்தைச் சேர்ந்தவர் சோட்டிலால் ராம், 32. கும்மிடிப்பூண்டி அடுத்த மாதர்பாக்கம் அருகே தாணிப்பூண்டி கிராமத்தில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்தார். நேற்று காலை, தொழிற் சாலையின் மேல்தளத்தில், நடந்தபடி மொபைல்போனில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது, மேல்தளம் அமைந்துள்ள, 30 அடி உயரத்தில் இருந்து தவறி கீழே விழுந்து, தலையில் பலத்த காயமடைந்தார். ஆபத்தான நிலையில், பொன்னேரி அரசு பொது மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். பாதிரிவேடு போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை