உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / நாளை விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம்

நாளை விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம்

திருவள்ளூர்:திருவள்ளுர் கலெக்டர் அலுவலகத்தில், நாளை விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம் நடைபெற உள்ளது.திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:திருவள்ளுர் கலெக்டர் அலுவலக கூட்டரங்களில், மாவட்ட அளவிலான விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம், நாளை காலை 10:00 மணிக்கு நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் தோட்டக்கலை, கால்நடை பராமரிப்பு, மீன்வளம், மின்வாரியம், வருவாய் உள்ளிட்ட வேளாண் சார்ந்த அனைத்து துறைகளின் மாவட்ட அளவிலான தலைமை அலுவலர்கள் அனைவரும் கண்டிப்பாக கலந்து கொள்ள உத்தரவிடப்பட்டு உள்ளது.இக்கூட்டத்தில், திருவள்ளுர் மாவட்டத்தைச் சேர்ந்த அனைத்து விவசாயிகளும் பங்கேற்று, வேளாண் சார்ந்த தங்களது குறைகளை மனுவாக அளித்து பயன்பெறலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி