மாயமான கூலித்தொழிலாளி சடலமாக மீட்பு
திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே மாயமான கூலித் தொழிலாளி சடலமாக மீட்கப்பட்டார். திருவள்ளூர் அடுத்த ஒதிக்காடு பகுதியைச் சேர்ந்தவர் ரவி, 59. கூலித்தொழிலாளி. இவர், கடந்த 12ம் தேதி இரவு 8:30 மணிக்கு வீட்டிலிருந்து வெளியே சென்றவர், பின் வீடு திரும்பவில்லை. நேற்று முன்தினம் காலை புன்னப்பாக்கம் பகுதியில் உள்ள குட்டை அருகே உயிரிழந்து கிடப்பதாக, புல்லரம்பாக்கம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. விரைந்து வந்த போலீசார், சடலத்தை மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.