உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / குட்கா வழக்கில் ஒருவர் கைது

குட்கா வழக்கில் ஒருவர் கைது

கும்மிடிப்பூண்டி, டிச. 5--கும்மிடிப்பூண்டி அடுத்த, எளாவூர் சோதனைச்சாவடியில், நேற்று முன்தினம் டூ--வீலரில் கடத்தி வரப்பட்ட, 40 கிலோ குட்கா பண்டல்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.அதை கடத்திய புதுகும்மிடிப்பூண்டி, பாலயோகி நகர் பகுதியைச் சேர்ந்த சக்திவேல் முருகன், 26, என்பவரை கைது செய்தனர். வழக்கு பதிந்த ஆரம்பாக்கம் போலீசார், அவருக்கு குட்கா விற்பனை செய்த, ஆந்திர மாநிலம் சூளூர்பேட்டை பகுதியைச் சேர்ந்த கோவர்தன், 49, என்பவரை நேற்று கைது செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ