உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / மக்கள் குறைதீர் கூட்டம் 395 மனுக்கள் ஏற்பு

மக்கள் குறைதீர் கூட்டம் 395 மனுக்கள் ஏற்பு

திருவள்ளூர் திருவள்ளூரில் நேற்று நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில், 395 மனுக்கள் ஏற்கப்பட்டன. திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று, வாராந்திர மக்கள் குறைதீர் கூட்டம், கலெக்டர் பிரதாப் தலைமையில் நேற்று நடந்தது. இக்கூட்டத்தில், நிலம் சம்பந்தமாக 123, சமூக பாதுகாப்பு திட்டம் 51, வேலைவாய்ப்பு வேண்டி 45, பசுமை வீடு, அடிப்படை வசதிகள் வேண்டி 75 மற்றும் இதர துறை 101 என, மொத்தம் 395 மனுக்கள் பெறப்பட்டன. இம்மனுக்களின் மீது உரிய நடவடிக்கை எடுத்து, தகுதியுள்ள பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்க, சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ