கும்மிடியில் பெருமாள் கருட சேவை
கும்மிடிப்பூண்டி, கும்மிடிப்பூண்டி பிரசன்ன வெங்கடேச பெருமாள், கருட வாகனத்தில் வீதியுலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கும்மிடிப்பூண்டி பஜார் வீதியில் உள்ள அலர்மேல் மங்கை தாயார் சமேத பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில், புரட்டாசி மாதத்தை முன்னிட்டு, ஊஞ்சல் சேவை உள்ளிட்ட சிறப்பு உத்சவங்கள் நடைபெற்றன. அதை தொடர்ந்து, நேற்று முக்கிய நிகழ்வான கருட சேவை நடைபெற்றது. கும்மிடிப்பூண்டியில் உள்ள முக்கிய வீதிகள் வழியாக, பஜனை கோஷ்டியுடன், கருட வாகனத்தில் பெருமாள் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.