உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / ஏ.என்.குப்பம் கோவில் குளம் பராமரிக்க கோரிக்கை

ஏ.என்.குப்பம் கோவில் குளம் பராமரிக்க கோரிக்கை

கும்மிடிப்பூண்டி:ஏ.என்.குப்பம் சிவன் கோவில் குளத்தை சுற்றிலும் வளர்ந்துள்ள செடி, கொடிகளை அகற்றி, துார்வாரி பராமரிக்க வேண்டும் என, கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கவரைப்பேட்டை அடுத்த ஏ.என்.குப்பம் கிராமத்தில், சிதிலமடைந்த சிவன் கோவில் உள்ளது. இக்கோவிலில் குளம் ஒன்று அமைந்துள்ளது. ஊராட்சி நிர்வாகம் முறையாக பராமரிக்க தவறியதால், குளத்தை சுற்றிலும் செடி, கொடிகள் வளர்ந்துள்ளன. மேலும், குளத்தின் உட்புறம் துார்ந்துள்ளது. மழைக்காலத்திற்கு முன் குளத்தை சுற்றியுள்ள செடி, கொடிகளை அகற்றி, துார்வார வேண்டும் என, கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை