உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / கும்மிடி - கிளாம்பாக்கம் பஸ் இயக்க கோரிக்கை

கும்மிடி - கிளாம்பாக்கம் பஸ் இயக்க கோரிக்கை

கும்மிடிப்பூண்டி: தொழில் நகரமான கும்மிடிப்பூண்டியில் இருந்து கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு நேரடி பேருந்து இயக்க வேண்டும் என, தென் மாவட்டங்களை சேர்ந்த தொழிலாளர்கள், ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கும்மிடிப்பூண்டி சிப்காட், சிட்கோ, தேர்வாய்கண்டிகை சிப்காட் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம பகுதிகளில், 350க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. அவற்றில், தமிழகத்தின் பிற மாவட்டங்களை சேர்ந்த பல்லாயிரக்கணக்கானோர் வேலை பார்த்து வருகின்றனர். குறிப்பாக தென் மாவட்டங்களை சேர்ந்த ஏராளமானோர் கும்மிடிப்பூண்டி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். சில வருடங்களுக்கு முன் வரை, கும்மிடிப்பூண்டியில் இருந்து நேரடியாக கோயம்பேடு சென்று பேருந்துகள் பிடித்து சொந்த ஊருக்கு சென்று வந்தனர். தற்போது, கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் சென்று சொந்த ஊருக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், கும்மிடிப்பூண்டியில் இருந்து மாதவரம், மாதவரத்தில் இருந்து கிளாம்பாக்கம், கிளாம்பாக்கத்தில் இருந்து சொந்த ஊருக்கு என மூன்று பேருந்துகள் மாறி சென்று வருகின்றனர். எனவே தொழில் நகரமான கும்மிடிப்பூண்டியில் இருந்து கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு நேரடி பேருந்துகள் இயக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தென் மாவட்டங்களை சேர்ந்தவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை