உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / ரேஷன் கடைக்கு புதிய கட்டடம் அமைக்க கோரிக்கை

ரேஷன் கடைக்கு புதிய கட்டடம் அமைக்க கோரிக்கை

சோழவரம்,:சோழவரம் அடுத்த, நெற்குன்றம் கிராமத்தில், 30 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட ரேஷன் கடை கட்டடம் பழுதடைந்து, ஆங்காங்கே விரிசல்கள் ஏற்பட்டன.மழைக்காலங்களில், மழைநீர் உள்புகுந்து உணவுப் பொருட்களும் வீணாகின. கட்டடம் சேதம் அடைந்து இருப்பதால், பொருட்கள் வாங்க வரும் பொதுமக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி வருவது குறித்து, கடந்த ஆண்டு, மே மாதம் நம் நாளிதழில் செய்தி வெளியானது.அதையடுத்து, ரேஷன் கடை அங்கிருந்து, வாடகை கட்டடத்திற்கு மாற்றம் செய்யப்பட்டது.இந்நிலையில், மேற்கண்ட பழுதடைந்த கட்டடத்தை இடித்து அகற்றிவிட்டு, புதியது கட்டப்படாமல் இருக்கிறதுசேதம் அடைந்த கட்டடத்தின் அருகில், அங்கன்வாடி மையம் செயல்படுகிறது. கட்டடம் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில், அங்கன்வாடி குழந்தைகளின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகி உள்ளது.மேலும், இதே வளாகத்தில், ஊராட்சி அலுவலகம், அரசு துவக்கப் பள்ளியும் செயல்படுவதால், அசம்பாவிதங்கள் நேரிடும் முன், சேதம் அடைந்த ரேஷன் கடை கட்டடத்தை இடித்துவிட்டு, புதியது கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கிராமவாசிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி