உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / மூத்த குடிமக்களுக்கு பிரத்யேக மொபைல் செயலி அறிமுகம்

மூத்த குடிமக்களுக்கு பிரத்யேக மொபைல் செயலி அறிமுகம்

திருவள்ளூர்:மூத்த குடிமக்களுக்கான பிரத்யேக செயலியை, மொபைல் போனில் பதிவிறக்கம் செய்து பயனடையுமாறு, கலெக்டர் கேட்டுக் கொண்டுள்ளார்.திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:தமிழக அரசின் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில், மூத்த குடிமக்கள் நலனுக்காக 'மொபைல்' செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இச்செயலியில், மூத்த குடிமக்களுக்கு தேவையான வழிகாட்டுதல்கள் இடம்பெற்றுள்ளன.குறிப்பாக அருகில் உள்ள முதியோர் இல்லங்கள், மருத்துவமனைகள், மக்கள் மருந்தகம், மத்திய - மாநில திட்டங்கள், மாவட்ட சட்ட சேவை உள்ளிட்ட பல்வேறு விபரங்கள் உள்ளன.திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மூத்த குடிமக்கள், 'கூகுள் பிளே ஸ்டோர்' மூலமாகவோ அல்லது Seniorcitizen.tnsocialwelfare.tn.gov.in என்ற இணையதளம் மூலமாகவோ பதிவிறக்கம் செய்து பயனடையலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை