மேலும் செய்திகள்
சாலை நடுவே கொடி கம்பம் நெடுஞ்சாலை துறை அகற்றுமா?
29-Mar-2025
மின் கம்பங்களில் விளம்பர பதாகை அகற்றம்
30-Mar-2025
திருமழிசை:சென்னை பள்ளிக்கரணையில், சில ஆண்டுகளுக்கு முன் நெடுஞ்சாலையில் வைக்கப்பட்டிருந்த விளம்பர பதாகை விழுந்ததில் சுபஸ்ரீ, 23, என்ற பெண் லாரியில் சிக்கி உயிரிழந்தார். இதையடுத்து, நெடுஞ்சாலை ஓங்களில் விளம்பர பதாகைகள் வைக்க உயர்நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டது.உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும், சென்னை - பெங்களூரு தேசிய அதிவிரைவு தேசிய நெடுஞ்சாலை, திருமழிசை - ஊத்துக்கோட்டை நெடுஞ்சாலை, திருவள்ளூர் - ஸ்ரீபெரும்புதுார் நெடுஞ்சாலை ஆகிய பகுதிகளில், உயரமான கட்டடங்கள் மீது விளம்பர பதாகை மற்றும் திருமண வரவேற்பு பேனர்கள் மற்றும் செல்போன் டவர்கள் அமைப்பது தற்போது அதிகரித்து வருகிறது.இவ்வாறு அனுமதியில்லாமல் உயரமான கட்டடங்கள் மீது வைக்கப்படும் விளம்பர பதாகைகள் மற்றும் செல்போன் டவர்களால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நெடுஞ்சாலையோரம் பெருகி வரும் விளம்பர பதாகைகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
29-Mar-2025
30-Mar-2025