உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / திருத்தணி கோவில் வசூல் ரூ.1.41 கோடி

திருத்தணி கோவில் வசூல் ரூ.1.41 கோடி

திருத்தணி:திருத்தணி முருகன் கோவிலுக்கு தினமும் பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் வந்து மூலவர் முருகப்பெருமானை தரிசனம் செய்கின்றனர். மேலும் பக்தர்கள் தங்களது வேண்டுதல்களை ரொக்கம், தங்கம், வெள்ளி போன்றவை காணிக்கையாக உண்டியலில் செலுத்துகின்றனர்.அந்த வகையில், கடந்த, 30 நாட்களில் பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கை நேற்று கோவில் அறங்காவலர் குழுத் தலைவர் ஸ்ரீதரன், இணை ஆணையர் ரமணி ஆகியோர் முன்னிலையில் கோவில் ஊழியர்கள் எண்ணினர்.இதில் ஒரு கோடியே, 41 லட்சத்து, 5 ஆயிரத்தி, 665 ரூபாய் ரொக்கம், 507 கிராம் தங்கம்,14 கிலோ 770 கிராம் வெள்ளி இருந்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ