உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / திருத்தணி கோவில் உண்டியல் வசூல் ரூ.1.48 கோடி

திருத்தணி கோவில் உண்டியல் வசூல் ரூ.1.48 கோடி

திருத்தணி;திருத்தணி முருகன் கோவிலில், கடந்த 26 நாட்களில் பக்தர்கள், 1.48 கோடி ரூபாயை காணிக்கையாக செலுத்தியுள்ளனர். திருத்தணி முருகன் கோவிலுக்கு தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து, மூலவரை தரிசித்து செல்கின்றனர். மேலும், பக்தர்கள் தங்களது வேண்டுதல்களை ரொக்கம், தங்கம், வெள்ளி போன்றவற்றை உண்டியலில் காணிக்கையாக செலுத்துகின்றனர். அந்த வகையில், 26 நாட் களில் பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கையை, நேற்று கோவில் இணை ஆணையர் ரமணி மற்றும் அறங்காவலர்கள் முன்னிலை யில் எண்ணப்பட்டது. இதில், 1 கோடியே, 47 லட்சத்து, 60,049 ரூபாய், 732 கிராம் தங்கம், 16.33 கிராம் வெள்ளி ஆகியவை இருந்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை