உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / சாலையில் முட்செடிகள் விபத்து அபாயம்

சாலையில் முட்செடிகள் விபத்து அபாயம்

திருத்தணி:திருத்தணி இந்திரா நகர், கன்னிகாபுரம் வழியாக மாம்பாக்கசத்திரம் வரை செல்லும் மாநில நெடுஞ்சாலை யில் தனியார் பேருந்துகள், வேன், கார் மற்றும் இரு சக்கர வாகனங்களில் அதிகாலை, 4:30 மணி முதல் நள்ளிரவு, 11:30 மணி வரை அதிகளவில் சென்று வருகின்றன. இச்சாலையை திருத்தணி நெடுஞ்சாலை துறையினர் பராமரித்து வருகின்றனர். இந்நிலையில், கன்னிகாபுரம் இருளர் காலனி பகுதியில் இருந்து மாம்பாக்கசத்திரம் கூட்டுச்சாலை வரை, நான்கு கிலோ மீட்டர் துாரம் வரை சாலையின் இருபுறமும் செடிகள் மற்றும் முட்செடிகள் வளர்ந்துள்ளன. இப்பகுதியில், ஐந்துக்கும் மேற்பட்ட இடத்தில் வளைவுகள் உள்ளதால் எதிரே வரும் வாகனங்கள் தெரியாமல் வாகன ஓட்டிகள் அடிக்கடி நேருக்கு நேர் மோதி விபத்துக்களில் சிக்குகின்றனர். எனவே சாலையோரம் வளர்ந்துள்ள செடிகளை அகற்ற வேண்டும் என வாகன ஓட்டிகள் எதிர்பார்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை