சமுதாய கூடம் இல்லாமல் திருப்பந்தியூர் வாசிகள் அவதி
திருப்பந்தியூர்:கடம்பத்துார் ஒன்றியத்துக்கு உட்பட்டது, திருப்பந்தியூர் ஊராட்சி. இங்கு, சமுதாய கூடம் இல்லாததால், அப்பகுதிவாசிகள் அருகில் உள்ள சுங்குவார்சத்திரம், மப்பேடு ஆகிய கிராமங்களில் உள்ள தனியார் மண்டபத்தை அணுகும் நிலை ஏற்பட்டுள்ளது.இதனால், அப்பகுதிவாசிகளுக்கு பணம் மற்றும் காலவிரயம் ஏற்படுகிறது. இதனால், அப்பகுதிவாசிகள் தங்கள் இல்ல சுப நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு அவதிப்பட்டுவருகின்றனர்.இது தொடர்பாக, ஊராட்சியில் நடந்த கிராம சபை கூட்டத்தில் பலமுறை மனு அளித்துள்ளனர். ஆனால், தற்போது வரை ஒன்றிய நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்காதது, அப்பகுதிவாசிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. எனவே, சமுதாய கூடம் கட்ட ஒன்றிய நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, திருப்பந்தியூர் பகுதிவாசிகள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.