போதையில் மயங்கி விழுந்த காய்கறி வியாபாரி உயிரிழப்பு
இருளஞ்சேரி:பேரம்பாக்கம் அடுத்த இருளஞ்சேரியைச் சேர்ந்தவர் ராஜா, 47. இவருக்கு மீனாட்சி, 39, என்ற மனைவியும், மூன்று மகள்களம் உள்ளனர். பேரம்பாக்கம் பஜாரில் காய்கறி வியாபாரம் செய்து வந்தார்நேற்று முன்தினம் மாலை குடிபோதையில் வீட்டில் மயங்கி கிடந்தார். உறவினர்கள் இவரை மீட்டு, பேரம்பாக்கம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவமனையில் சேர்த்தனர். மேல்சிகிச்கைக்காக, திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பலியானார். மப்பேடு போலீசார் விசாரிக்கின்றனர்.