வடமங்கலம் நெடுஞ்சாலையில் குழாய் சேதமடைந்து குடிநீர் வீண்
வயலுார், கடம்பத்துார் ஒன்றியம் உளுந்தை ஊராட்சியிலிருந்து வயலுார் வழியாக, வடமங்கலம் செல்லும் நெடுஞ்சாலை உள்ளது. இந்த நெடுஞ்சாலையில் கிளாய் கண்டிகை முதல் வயலுார் செல்லும் நெடுஞ்சாலை பகுதியில், பல இடங்களில் வயலுார் ஊராட்சிக்கு செல்லும் குழாய் சேதமடைந்து குடிநீர் வீணாகி வருகிறது.கடந்த சில தினங்களாக, சேதமடைந்த குழாயை சீரமைக்க, ஊராட்சி நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என, பகுதிவாசிகள் குற்றம்சாட்டுகின்றனர். தற்போது, கோடைக்காலம் துவங்கிவிட்டதால், குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.எனவே, சம்பந்தப்பட்ட ஒன்றிய அதிகாரிகள் ஆய்வு செய்து, குடிநீர் வீணாவதை தடுக்கவும், சாலையை சீமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, வயலுார் பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.