உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவாரூர் / மூதாட்டி மூளைச்சாவு 5 பேருக்கு மறுவாழ்வு

மூதாட்டி மூளைச்சாவு 5 பேருக்கு மறுவாழ்வு

மன்னார்குடி:திருவாரூர் மாவட்டம், எடமேலையூரை சேர்ந்த கோவிந்தராஜ் மனைவி பாப்பாத்தி, 65. இரு நாட்களுக்கு முன், மன்னார்குடி அருகே மேலவாசலில் நடந்த விபத்தில் பாப்பாத்தி தலையில் பலத்த காயமடைந்தார். தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில், நேற்று முன்தினம், மூளைச்சாவு அடைந்தார். அவரது குடும்பத்தினர் விருப்பப்படி பாப்பாத்தியின் உடல் உறுப்புகள் தஞ்சை, திருச்சி, மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட்டது. இதில் 5 பேர் மறுவாழ்வு பெற்றனர்பாப்பாத்தி உடலுக்கு ஆர்.டி.ஓ., இலக்கியா, மருத்துவமனை முதல்வர் பாலாஜி நாதன் மற்றும் டாக்டர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ