வலைதளங்களில் அவதுாறு: ஒருவர் கைது
தூத்துக்குடி : சமூக வலைதளங்களில் தேசிய தலைவர்கள் குறித்து அவதூறாகவும், ஜாதி மோதல்களை தூண்டும் வகையிலும் கருத்து பதிவிட்ட திருச்செந்தூர் மணிகண்டன் 35, கைது செய்யப்பட்டார். மணிகண்டன் மீது ஏற்கனவே புதுக்கோட்டை திருச்செந்தூர், ஏரல், சென்னை அண்ணா நகர், திருநெல்வேலி அரசு மருத்துவமனை உள்ளிட்ட ஸ்டேஷன்களில் 7 வழக்குகள் உள்ளன.