உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி /  பஸ் ஸ்டாண்டில் கூரை பூச்சு பெயர்ந்தது

 பஸ் ஸ்டாண்டில் கூரை பூச்சு பெயர்ந்தது

துாத்துக்குடி: துாத்துக்குடி புதிய பஸ் நிலைய கட்டட வளாகத்தில், மாநகராட்சிக்கு சொந்தமான, 50க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இந்த கட்டடம் 30 ஆண்டுகள் பழமையானது. இந்த கட்டடத்தில், முனியசாமிபுரத்தை சேர்ந்த சுந்தர் என்பவர் நடத்தும் உணவகத்தில், நேற்று காலை, கூரை பூச்சு பெயர்ந்துவிழுந்து கிடந்தது. ஹோட்டல் செயல்படும் நேரத்தில் கூரை பூச்சு பெயர்ந்து விழுந்திருந்தால் பெரும் விபத்து ஏற்பட்டு இருக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !