உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / திருப்பூர் மாவட்டத்துக்கு அரசு வக்கீல்கள் நியமனம்

திருப்பூர் மாவட்டத்துக்கு அரசு வக்கீல்கள் நியமனம்

திருப்பூர் : திருப்பூர் மாவட்டத்துக்கு நியமிக்கப்பட்டுள்ள அரசு வக்கீல்கள் நேற்று பொறுப்பேற்றனர்.திருப்பூர் சார்பு நீதிமன்றம் மற்றும் மாவட்ட உரிமையியல் நீதிமன்றங்களின் அரசு வக்கீலாக சுப்ரமணியம், விரைவு நீதிமன்ற அரசு வக்கீல்களாக (எண் 4) சத்யநாராயணன், (எண் 5) வெங்கடாசலபதி, உடுமலையில் சார்பு நீதிமன்றம் மற்றும் மாவட்ட உரிமையியல் நீதிமன்றங்களின் அரசு வக்கீலாக ராமகிருஷ்ணன், அவிநாசியில் மாவட்ட உரிமையியல் நீதிமன்ற வக்கீலாக ரூபன், பல்லடம் மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்துக்கு சதீஷ்குமார் ஆகியோரை, அரசு வக்கீல்களாக நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.அவர்கள், நேற்று பொறுப்பேற்றனர். காங்கயம் மற்றும் தாராபுரம் நீதிமன்றங்களுக்கும் அரசு வக்கீல்கள் அறிவிக்கப்பட உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி