தொழிலாளி தற்கொலை
காங்கேயம்:காங்கேயம், நீலக்காட்டுபுதுாரை சேர்ந்தவர் தியாகராஜன், 49; கூலி தொழிலாளி. நான்காண்டுகளுக்கு முன் நெஞ்சுவலி ஏற்பட்டு, ஆப்பரேசன் செய்துள்ளார். ஆனாலும் வலியால் அவதிப்பட்டு வந்தார். நேற்று முன்தினம் வீட்டில் சேலையால் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து காங்கேயம் போலீசார் விசாரிக்கின்றனர்.