சண்முகநாதருக்கு சிறப்பு பூஜை
பெருமாநல்லுார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில், வள்ளி தெய்வானையுடன் ஆறுமுகம் கொண்ட சண்முகநாதர் சன்னதி உள்ளது. நேற்று திருக்கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு சண்முகநாதருக்கு பல்வேறு திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடந்தது; சண்முகநாதர் வெள்ளி கவசத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சண்முகநாதரை வழிபட்டனர்.