மேலும் செய்திகள்
கால்பந்து பயிற்சியாளர் பணியில் சேர வேண்டுமா?
11-Aug-2024
திருப்பூர்: நானுாறு மீட்டர் தடை தாண்டும் போட்டியில், தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்று பதக்கம் பெற்றுள்ள, ஸ்ரீவர்தனி, தெற்காசிய விளையாட்டு போட்டிக்கான தகுதிச்சுற்று போட்டியில் பங்கேற்க, இன்று, பெங்களூரு செல்கிறார். இதில், ஒலிம்பிக் தொடரில் விளையாடிய வீரர், வீராங்கனைகள் முதற்கொண்டு, தேசிய, சர்வதேச அளவில் ஜொலிக்கும் பிரபல வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர்.திருப்பூர், ஐவின் டிராக் அகாடமியில் பயிற்சி பெற்ற ஸ்ரீவர்தனி கூறியதாவது:திருப்பூர் புனித ஜோசப் பெண்கள் கல்லுாரியில் பயின்று வருகிறேன். கடந்த, 10 ஆண்டுகளாக, 400 மீ., தடை தாண்டும் போட்டியில் பயிற்சி பெற்று, தேசிய அளவிலான போட்டிகளில் பங்கெடுத்துள்ளேன். தடகள வீராங்கனை, பி.டி.உஷா, 400 மீ., தடை தாண்டும் ஓட்டத்தை, 55.42 வினாடிகளில் கடந்தது தான், இந்திய சாதனையாக இருந்து வருகிறது. இதை முறியடிக்க வேண்டும் என்பது என் விருப்பம்; பின், உலக சாதனையாக அமெரிக்க வீராங்கனை சிட்னி மெலாலின், 50 வினாடிகள் என்ற சாதனையையும் முறியடிக்க வேண்டும் என்பதும் என் லட்சியம். உடுமலை தான் என் சொந்த ஊர். தடகளப் பயிற்சிக்காக திருப்பூர் வந்தோம். இங்கு என் தந்தை ஒர்க்ஷாப் வைத்துள்ளார். இரவில் உடுமலை சென்று விவசாயப் பணியை கவனித்து விட்டு, பகல் நேரங்களில் திருப்பூரில் இருப்பார். அந்தளவு எனக்கு ஊக்கமளிக்கிறார்.
11-Aug-2024