| ADDED : மார் 28, 2024 10:41 PM
உடுமலை:கோமங்கலம்புதுார் வித்ய நேத்ரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், ஒலிம்பியாட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, பாராட்டு தெரிவிக்கப்பட்டது.கோமங்கலம்புதுார் வித்ய நேத்ரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், மழலையர் பிரிவு மற்றும் துவக்க நிலை மாணவர்களுக்கு, பாட வாரியாக ஸ்டார் மற்றும் ஸ்டெம் ஒலிம்பியாட் தேர்வுகள் கடந்தாண்டு டிச., மாதம் நடந்தது.இத்தேர்வில், 50 மாணவர்கள் பங்கேற்றனர். இதில், ஆறு மாணவர்கள் தங்கப்பதக்கமும், இரண்டு மாணவர்கள் வெள்ளிப்பதக்கமும், ஒரு மாணவர் வெண்கலப்பதக்கமும் பெற்றுள்ளனர். தவிர, ஸ்பெல் பீ ஒலிம்பியாட் தேர்வில், இரண்டு மாணவர்கள் தங்கப்பதக்கம் பெற்றுள்ளனர்.சுற்றுச்சூழல் ஒலிம்பியாட் தேர்வில், நான்கு மாணவர்கள், ஒலிம்பியாட் அறிவியல் தேர்வில் இரண்டு மாணவர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, பள்ளி தாளாளர் நந்த கோபாலகிருஷ்ணன், பள்ளி முதல்வர் கோபாலகிருஷ்ணன், ஆசிரியர்கள் பாராட்டு தெரிவித்தனர்.