உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / வாலிபர் கொலையில் முக்கிய ஆசாமி கைது

வாலிபர் கொலையில் முக்கிய ஆசாமி கைது

திருப்பூர்;திருப்பூரில் வாலிபர் கொலை வழக்கில், மூளையாக செயல்பட்ட முக்கிய ஆசாமியை, இரு மாதங்களுக்கு பின் போலீசார் கைது செய்தனர்.திருப்பூர், கணக்கம்பாளையம் பிரிவு, கல்லாங்காட்டை சேர்ந்தவர் புவனேஸ்வரன், 23. இவர் தனது தோழியின் போட்டோவை மொபைல் போனில்பதிவு செய்து வைத்திருந்தார்.இந்த போட்டோவை புவனேஸ்வரனுக்கு தெரியாமல், அவரது நண்பர்கள் தங்கள் மொபைல் போனுக்கு பரிமாற்றம் செய்து பணம் கேட்டு மிரட்டிய போது பிரச்னை ஏற்பட்டது.இதனால், புவனேஸ்வரனை தனியாக வரவழைத்து கொலை செய்தனர். கொலை தொடர்பாக, 13 பேரை அனுப்பர்பாளையம் போலீசார் கைது செய்தனர். கொலையில் மூளையாக செயல்பட்ட ஆத்துப்பாளையத்தை சேர்ந்த செல்லத்துரையை, 39 போலீசார் தேடி வந்தனர்.கடந்த, இரு மாதமாக தலைமறைவாக இருந்த அவரை பல இடங்களில் தனிப்படையினர் தேடி வந்தனர். கர்நாடகாவில் பதுங்கியிருந்த அவரை போலீசார் நேற்று கைது செய்தனர்.மேலும், கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சிறையில் உள்ள அஜீத், 22 என்பவர் மீது பல்வேறு வழக்குகள் இருந்த நிலையில்,அவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் போலீஸ்கமிஷனர் லட்சுமி உத்தரவின் பேரில் கைது செய்யப்பட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை