உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / குப்பை விவகாரத்தில் 14 முதல் போராட்டம்

குப்பை விவகாரத்தில் 14 முதல் போராட்டம்

பொங்கு பாளையம் ஊராட்சி, காளம்பாளையத்தில் உள்ள காலாவதி பாறைக்குழியில் மாநகராட்சி குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. ஊராட்சி மன்ற அனைத்து உறுப்பினர்களும் ஒன்றிணைந்து, குப்பையால் நிலத்தடி நீர் மற்றும் துர் நாற்றத்தால் பொதுமக்கள் பாதிக்கப்படுவர். குப்பை கொட்டுவதை தடுத்து நிறுத்த ஊராட்சி மன்றத்தை கூட்டி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என தலைவரிடம் மனு கொடுத்தனர். ஊராட்சி கூட்டம் கூட்டப்படவில்லை. ஊராட்சி மன்ற கூட்டத்தை கூட்டி குப்பை கொட்ட எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்ற கோரி ஊராட்சி மன்ற அலுவலகம் முன் வரும் 14ம் தேதி முதல் காத்திருப்பு போராட்டம் நடத்த போவதாக அப்பகுதி பொதுமக்கள் அறிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ