உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / உண்டியலில் திருட்டு: வாலிபருக்கு 2 ஆண்டு

உண்டியலில் திருட்டு: வாலிபருக்கு 2 ஆண்டு

திருப்பூர்: சிவகங்கை மாவட்டம், கல்லல் கிராமத்தை சேர்ந்தவர் உதயா, 35. திருப்பூர் முத்தணம்பாளையத்தில் உள்ள உலகாத்தம்மன் சித்தாயி கோவிலில் கடந்த ஆண்டு மார்ச் 21ம் தேதி நள்ளிரவு பூட்டை உடைத்து உள்ளே சென்று உண்டியலை உடைத்து, 2 ஆயிரத்தை திருடி சென்றார். நல்லுார் போலீசார் உதயாவை கைது செய்து சிறையில் அடைத்தனர். வழக்கை விசாரித்த திருப்பூர், ஜே.எம்., 4 கோர்ட் மாஜிஸ்திரேட் லோகநாதன், உதயாவுக்கு, இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். அரசு தரப்பில் அரசு வக்கீல் கவிதா ஆஜரானார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை