உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / போலி ஆவணத்துடன் தங்கிய வங்கதேசத்தினர் 7 பேர் கைது

போலி ஆவணத்துடன் தங்கிய வங்கதேசத்தினர் 7 பேர் கைது

திருப்பூர்: திருப்பூர் மற்றும் மாவட்டத்தின் சில பகுதிகளில் போலி ஆவணங்களுடன் வங்க தேசத்தைச் சேர்ந்த நபர்கள் ஊடுருவி வருவது அதிகரித்து வருகிறது. நேற்று திருப்பூர் வடக்கு போலீசார் சந்தேகப்படும்படியான சிலரை பிடித்து விசாரித்தனர்.அதில், திருப்பூர் - பவானி நகர் பகுதியில் ஒரு பனியன் உற்பத்தி நிறுவனத்தின் விடுதியில் தங்கியிருந்த ஏழு பேர் பிடிபட்டனர். விசாரணையில், வங்க தேசத்தைச் சேர்ந்த இவர்கள் உரிய ஆவணங்கள் இன்றி சில மாதம் முன், இங்கு வந்து தொழிலாளர்களாக வேலை பார்ப்பது தெரிய வந்தது. இதில், ஷாஜஹான், 22, முக்தர், 50, நுாரவி பிரமானிக், 30, இம்ரான் ஹூசேன், 40, கபீர்ஹூசேன், 35, ரபிகுல் இஸ்லாம், 30 மற்றும் ரபானி மண்டல், 35 ஆகிய ஏழு பேரை போலீசார் கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.மாஜிஸ்திரேட் உத்தரவின்படி, ஏழு பேரும் சென்னை - புழல் சிறையில் அடைக்க அழைத்துச் செல்லப்பட்டனர். திருப்பூரில் நடப்பு மாதத்தில் மட்டும் இதுவரை, உரிய ஆவணங்கள் இன்றி தங்கியிருந்த வங்கதேசத்தினர், 46 பேரை போலீசார் கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

mei
ஜன 18, 2025 18:32

இப்பிடி நுழைந்து பின்னர் கோவில்களுக்கு அருகில் மசூதி கட்டுவதும் நூற்றண்டு காலமாக நாம் பின்பற்றி வரும் வணக்கம், வழக்கம் எல்லாவற்றையும் மாற்ற முயல்வதும் அப்பப்பா இந்த பெருகிவரும் புழுக்களை தடுக்க முடியாதா, முருகா


Yes your honor
ஜன 18, 2025 10:17

இது என்ன பெரிசு. சென்னை கோயம்பேடு பஸ் நிலையம் எதிரிலுள்ள ஜெய்நகர் பார்க் தெருவில் சென்று பாருங்கள், இங்கு முஸ்லிம்கள் அதிகமாக வசிக்கிறார்கள், அவர்களில் வங்கதேசத்தினர் அதிகமாக கண்களுக்கு தென்படுகின்றனர். இவர்களுக்கு தமிழும் தெரியவில்லை, இந்தியும் தெரியவில்லை, வெறும் வங்காளமொழி மட்டுமே பேசுகிறார்கள். தங்களுக்கு தெரிந்த ஆங்கிலத்தை வைத்துக்கொண்டு சென்னையில் வேலையில் சேர்ந்துள்ளனர் போல் தெரிகிறது. ஐடி கார்ட் அணிந்து கொண்டு டூவீலரில் ஆண்களும் பெண்களும் செல்வதை நான் என் கண்ணால் கண்டுள்ளேன். அங்கு போலீஸ் ஒரு ரெய்ட் நடத்தினால் நிறையப்பேர் பிடிபட வாய்ப்புள்ளது.


நிக்கோல்தாம்சன்
ஜன 18, 2025 22:07

இது எல்லா நகரிலும் நடக்கிறது என்று தெரிகிறது...ஆனால் நடவடிக்கை ?


PalaniKuppuswamy
ஜன 18, 2025 08:23

இதையும் அஸ்ஸாம் மாநில முதல்வர் சொல்லித்தான் தெரிய வருகிறது . கோர் கோர் .. கும்ப கர்ணன் தூக்கத்தில் .. அரசு