உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கடத்தல்; மேலும் 2 பேர் கைது

கடத்தல்; மேலும் 2 பேர் கைது

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடை சேர்ந்தவர் கலா, 44; நில தரகர். ஈரோடு - பழநி ரோடு காங்கயம் வழியாக காரில் சென்றபோது, மற்றொரு காரில் வந்த கும்பல் வழிமறித்து, இவரைகடத்தியது. படியூர் அருகே அறையில் அடைத்துவைத்து ஐந்து லட்சம் ரூபாய், நகைகளை கும்பல் பறித்தது. கடத்தல் தொடர்பாக, பரமத்தி வேலுாரை சேர்ந்த சுதா, 43 உட்பட 5 பேரை காங்கயம் போலீசார் ஏற்கனவே கைது செய்தனர். நேற்று,முத்துாரை சேர்ந்த செந்தில், 30; திருப்பூரை சேர்ந்த செந்தில்குமார் வாண்டையார், 40 என, இருவரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ