உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பி.எஸ்.என்.எல்., 5ஜி சேவை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

பி.எஸ்.என்.எல்., 5ஜி சேவை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர்: ''ஊதியம் மற்றும் ஓய்வூதிய மாற்றங்களுக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும். '5ஜி' சேவை உடனடியாக கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒப்பந்த ஊழியருக்கு குறைந்தபட்சம் ஊதியம், இ.பி.எப்., மற்றும் இ.எஸ்.ஐ., பணப்பலன் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, திருப்பூர், ஜெய்வாபாய் பள்ளி சாலை,பி.எஸ்.என்.எல்., தலைமை அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது.தொழிற்சங்க நிர்வாகி அண்ணாதுரை தலைமை வகித்தார். நிர்வாகிகள் பழனிவேல்சாமி, ரமேஷ், சுப்ரமணியம் உள்ளிட்டோர் கோரிக்கையை விளக்கிப் பேசினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ