உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / சுற்றுலா விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

சுற்றுலா விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

திருப்பூர்; ஆண்டுதோறும், செப்., 27ம் தேதி, உலக சுற்றுலா தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழக சுற்றுலாத்துறை சார்பில், உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு, சுற்றுலா தொழில்முனைவோரை ஊக்குவிக்கும்வகையில், சுற்றுலா துறையில் ஈடுபட்டுள்ள அரசு சார் மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு, 17 பிரிவுகளில், 48 விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. அவ்வகையில், நடப்பு ஆண்டு சுற்றுலா தினத்தை முன்னிட்டு, சுற்றுலா தொழில்முனைவோர், விருது பெற விண்ணப்பிக்கலாம் என, திருப்பூர் மாவட்ட நிர்வாகம் அழைப்புவிடுத்துள்ளது. இது குறித்து, கலெக்டர் மனீஷ் நாரணவரே அறிக்கை: வரும் 27 ம் தேதி உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு, சுற்றுலா தொழில்முனைவோருக்கு விருதுகள் வழங்கப்பட உள்ளன. தமிழகத்திலுள்ள சிறந்த உள்நாட்டு சுற்றுலா ஏற்பாட்டாளர்கள், சிறந்த பயண பங்குதாரர், சிறந்த விமான பங்குதாரர், சிறந்த தங்குமிடம், உணவகம், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் நட்சத்திர நிகழ்ச்சியாளர், சிறந்த சாகச சுற்றுலா மற்றும் தங்கும் முகாம் ஏற்பாட்டாளர், சிறந்த சமூக ஊடகங்களில் செல்வாக்கு செலுத்துவோர், சிறந்த சுற்றுலா வழிகாட்டி உள்பட பல்வேறு பிரிவின்கீழ் விருது வழங்கப்பட உள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள சுற்றுலா தொழில்முனைவோர், சுற்றுலா விருதுக்காக விண்ணப்பிக்கலாம். www.tntourismawards.comஎன்கிற இணையதளத்தில், ஆன்லைன் வாயிலாக, வரும் 15 ம் தேதிக்குள் விண்ணப்பிக்கவேண்டும். மேலும் விவரங்களுக்கு, 96000 55793 என்கிற எண்ணில் மாவட்ட சுற்றுலா அலுவலரை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு, கலெக்டர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி