லாரி மோதி விபத்து கல்லுாரி மாணவர் பலி
பல்லடம் : பல்லடம் அருகே, லாரி மோதி ஏற்பட்ட விபத்தில், கல்லுாரி மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார்.பல்லடம், அண்ணா நகரை சேர்ந்த ரமேஷ் மகன் சதீஷ்குமார், 18. சூலுாரிலுள்ள தனியார் கல்லுாரி யில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு,கேரளாவில் இருந்து பூண்டு லோடு ஏற்றிக்கொண்டு, லாரி ஒன்று, பல்லடம் நோக்கி வந்தது. பல்லடம் அண்ணா நகர் வரும்போது, வீட்டுக்குச் செல்ல வேண்டி எதிர்திசையில் நடந்து வந்து கொண்டிருந்த சதீஷ்குமார் மீது லாரி மோதியது.இந்த விபத்தில் படுகாயமடைந்த சதீஷ்குமார், பல்லடம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த பல்லடம் போலீசார், தேனி - கோடங்கிபட்டியை சேர்ந்த லாரி டிரைவர் முனியசாமி மகன் வினோத் கோபி, 43, என்பவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.