கிளை நுாலகத்துக்கு கம்ப்யூட்டர் டேபிள்
திருப்பூர்:திருப்பூர் செய்தி மற்றும் மக்கள் அமைப்பு சார்பில், திருப்பூர் மாநகரம் மற்றும் புறநகர பகுதியில் பல்வேறு சமூக பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். மத்திய பஸ் ஸ்டாண்ட் எதிரில் உள்ள கிளை நுாலகத்துக்கு கம்ப்யூட்டர் வைக்க டேபிள் மற்றும் நுாலகத்துக்கு வருபவர்கள் தண்ணீர் குடிக்கும் வகையில் எவர்சில்வர் வாட்டர் பில்டர் ஆகியவற்றை வழங்கினர். இந்த அமைப்பின் உறுப்பினர்கள் பங்கேற்றனர்.