ஆபத்தான மின்கம்பம் உடனே மாற்றணும்
பொங்கலுார்: பொங்கலுார் - உப்பு கரைப் பாளையம் அருகே ரோட்டோரத்தில் சிமென்ட் பூச்சு பெயர்ந்து மின் கம்பம் எலும்புக்கூடாக காட்சி அளிக்கிறது. காற்று, மழை போன்ற இயற்கை சீற்றங்களின் போது மின்கம்பம் முறிந்து ரோட்டில் செல்வோர் மீது விழும் அபாயம் உள்ளது. எனவே சேதம் அடைந்த மின் கம்பத்தை மாற்ற மின்வாரியம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.