மேலும் செய்திகள்
முருகன் கோவில்களில் ஆடிக்கிருத்திகை
21-Jul-2025
திருப்பூர்; ஆவணி மாத முதல் பிரதோஷமான நேற்று, சிவாலயங்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி, அவிநாசிலிங்கேஸ்வரர், திருமுருகன்பூண்டி திருமுருகநாத சுவாமி, பெருமாநல்லுார் உத்தமலிங்கேஸ்வரர், ஊத்துக்குளி ரோடு காசி விஸ்வநாதர் கோவில் உட்பட, அனைத்து சிவாலயங்களிலும் நேற்று மாலை சிறப்பு பூஜை நடந்தது. மாலை, 4:00 மணிக்கு அதிகார நந்திக்கும், தொடர்ந்து, மூலவர் மற்றும் உற்சவமூர்த்திகளுக்கு மகா அபிேஷகம் மற்றும் அலங்காரபூஜைகள் நடந்தது. தொடர்ந்து, உமாமகேஸ்வரர் வெள்ளி ரிஷப வாகனத்தில் பிரகாரத்தை வலம் வந்து அருள்பாலித்தார். பக்தர்கள், பிரதோஷ நேரத்தில், சிவன் கோவிலை வலம் வந்து வழிபட்டனர்.
21-Jul-2025